பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் ..
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட முடியுமா? கவித்துவம் ..
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆச..
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒருவித விலகலுடன் வாழ்க்கையைப் பார்க்கும் அசோகமித்திரன்,..
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்த..
கிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சையளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்..
வெறும் சுய செய்திகளாகவும் , சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை...
ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல்
வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை,
புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் கனவு என்றும் ஒப்பிட்டு எழுதினேன்.
உறக்கத்தின் மடியில் தன்னிலையை முழுக்க உதிர்த்த பிறகு நிகழ்கிற கனவே கவிதை.
நிகழும்போ..
இரண்டு விரல் தட்டச்சு:நிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என்று வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். என் அப்பா அப்படித்தான் ஒரு மிகப் பெரிய மேஜையை வாங்கி வந்திருக்கிறார். பாதி அறை அதற்குப் போயிற்று. நாற்காலிகள் நான்கு. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. வீட்டில் இடமே இல்லை. ..
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார்.
இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப..
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலாக நடக்கின்றன. முடிச்சுகள் சுலபமாக அவிழ்கின்றன. கதாபாத்திரங்கள் பழமைவாதம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு புறத்தில் ஒரு மாயக் கதாபாத்திரம் தனக்கேயுரிய ஒரு கதை அமைத்துச் செல..
சென்னை நகரத்தைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. வரலாறு, சமூகம், உள்கட்டமைப்பு, பண்பாடு எனப் பல்வேறு கோணங்களில் பலரும் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் தனித்து நிற்பது அசோகமித்திரனின் பதிவு.
தமிழ் எழுத்தாளர்களில் நகர்ப்புற எழுத்தாளர்கள் என்னும் அரிய வகையைச் சேர்ந்த அசோ..
அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்கு வெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப் போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புவது மட்டுமின்றி, எக்ஸ்றே (ங..
‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ஓடியதோ ஓடவில்லையோ, இப்போது அதற்கான குட்டி மைய மண்டபம் மட்டும் இருக்கிறது. மண்டபத்தின் கீழே ‘கசங் கணக்காகத் தண்ணீர்’ கிடக்..